search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா பெண்"

    • நாஜி நவுஷி என்ற பெண்மணிக்கு 33 வயதாகும். இவர், 5 குழந்தைகளின் தாய்.
    • மெஸ்சியின் ஆட்டத்தை நேரில் பார்க்க கேரளாவில் இருந்து கத்தாருக்கு பயணித்த 5 குழந்தைகளின் தாய்

    தோஹா:

    உலகக் கோப்பை போட்டி காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை கால்பந்து ஜூரம் பற்றிக்கொண்டுள்ளது. நம் நாட்டிலும் கால்பந்து மோகம் அதிகமுள்ள மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இதன் பரபரப்பு பரவியிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். நாஜி நவுஷி என்ற பெண்மணி. 33 வயதாகும் இவர், 5 குழந்தைகளின் தாய்.

    அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சியின் அதிதீவிர ரசிகை. களத்தில் தனது அபிமான ஹீரோவின் சாகசத்தை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே நவுஷியின் கார் பயணத்தின் நோக்கம். மலையாள தேசத்தில் இருந்து 'மணல் தேசத்துக்கு' தனது பயணத்தை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கினார் நவுஷி. அவரது கார், மும்பையில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக கத்தாருக்கு நவுஷி தானே தனியாக காரை ஓட்டிச்சென்றார்.


    இவரின் நாயகரின் அணியான அர்ஜென்டினா, சவுதி அரேபியாவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதில் அனேக அர்ஜென்டினா ரசிகர்களைப் போல நவுஷிக்கும் வருத்தம்தான். ஆனால், 'உலக கோப்பையை வெல்லும் அர்ஜென்டினாவின் பயணத்தில் இது ஒரு சிறு பின்னடைவுதான். எனது ஹீரோ மெஸ்சி ஆடுவதை நேரில் காணப்போகிறேன் என்பதே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்கிறார் இவர் உற்சாகப் படபடப்புடன்.

    நவுஷியின் மனம் கவர்ந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று நள்ளிரவு மெக்சிகோவை சந்தித்து வெற்றி பெற்றது. நவுஷியின் கார் ஒரு நகரும் வீடாகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் மேற்புறத்தில் கூடார வசதியும், காருக்குள் மினி சமையல்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மாவு, மசாலாக்கள் போன்ற சமையல் பொருட்களையும் போதுமான அளவு 'ஸ்டாக்' வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்கிறார்.

    நாஜி நவுஷி தனது காருக்கு 'ஊலு' என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கிறார். இந்த மலையாள வழக்குமொழிச் சொல்லுக்கு 'அவள்' என்று பொருள். கால்பந்து காதலி நவுஷியை சுமந்துகொண்டு பாலைவன மண்ணில் பறந்துகொண்டிருக்கிறது, 'ஊலு'.

    கேரளாவில் கார் விபத்தில் பலியான கணவரின் உயிரணு மூலம் இளம்பெண் இரட்டை குழந்தைகளை பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன், கல்லூரி பேராசிரியர்.

    சுதாகரனின் மனைவி ஷில்னா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பின்பும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக கணவனும், மனைவியும் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    கடந்த ஆண்டு கண்ணூர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் குழந்தை பேறுக்கான சிகிச்சை எடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் சுதாகரன், கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிலம்பூர் சென்றார். காரில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சுதாகரன், பரிதாபமாக இறந்து போனார்.

    உடனடியாக அவரது உடல் கண்ணூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் அவரது மனைவி ஷில்னாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற ஷில்னா, காதல் கணவரின் ஆசைப்படி அவரது உயிரணு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார். இதற்காக இறந்த கணவரின் உடலில் இருந்து உயிரணுவை எடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்யும்படி டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ஷில்னா கணவரின் உயிரணு மூலம் குழந்தை பெறுவதில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து டாக்டர்கள், ஷில்னாவின் கணவர் உயிரணுவை எடுத்து செயற்கை கருத்தரிப்பு மூலம் ஷில்னா குழந்தை பெற ஏற்பாடு செய்தனர்.

    ஷில்னாவின் கணவர் இறந்து ஓராண்டு நிறைவு பெறும் நாளில் ஷில்னாவுக்கு பிரசவம் நடந்தது. அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதுபற்றி ஷில்னா கூறும்போது, இறந்துபோன என் கணவர் இப்போது இரட்டை குழந்தைகளாக பிறந்துள்ளார் என்று கூறி மகிழ்ந்தார். 

    ×