search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலி தொழிலாளி கொலை"

    சீர்காழி அருகே கூலித் தொழிலாளி மர்மமான முறையில் காயத்துடன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே புதுதுறை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு வசந்தா என்ற மனைவியும், வசந்த் என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சேகர், வெள்ளப்பள்ளம் உப்பனாறு கரையோரம் உள்ள கருவேல மரத்தடியில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனே திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து சேகர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த சேகரின் நெற்றியில் காயம் இருந்தது. இதனால் அவரை யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம்? என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    பின்னர் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சேகரின் மனைவி வசந்தா, திருவெண்காடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டையில் பணத் தகராறில் கூலி தொழிலாளியை கீழே தள்ளி விட்டதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த குடக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மகன் மாரியப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவருத்ரா என்பவரிடம் கடனாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியப்பனிடம் சென்று பணத்தை கேட்பதற்காக சிவருத்ரா அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு மாரியப்பன் தந்தை ராமகிருஷ்ணனிடம் கேட்டார். அப்போது தனது மகன் வீட்டில் இல்லை என்றும், வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். பணத்தை வாங்கி கொண்டு பணத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக கூறி ராமகிருஷ்ணனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் இருவருக்கும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சிவருத்ரா ராமகிருஷ்ணனை கீழே தள்ளி விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிவருத்ராவை தப்பி விடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமகிருஷ்ணனை தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சிவருத்ராவை அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×