search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூர்நோக்கு இல்லம்"

    • கூர்நோக்கு இல்ல சிறுவன்-கல்லூரி மாயமானார்கள்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மல்லி புதூரில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருக்கும் சிறுவன் மாடியில் காய வைக்கப்பட்ட துணிகளை எடுத்து வருவதாக கூறி சென்றார். பின்னர் அவனை காணவில்லை. எங்கு சென்றார்? என தெரியவில்லை.

    இதுகுறித்து கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் திலகவதி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகள் காயத்ரி(19). விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தோழியுடன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதுகுறித்து மாணவியின் தாய் இதயகனி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை நெசவாளர்காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜனனி(28). குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கணவர் ராஜ்குமார் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×