என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூடுதல் மழை"
- தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தொடங்கும்.
- கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை 921 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
கோவை:
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தொடங்கும். ஆனால் நடப்பாண்டு மே மாதம் இறுதியில் தொடங்கி, ஜூன் மாதத்தில் ஓரளவு பொழிந்தது.
ஜூலை மாத இறுதியில் இருந்து, மேற்கு தொடர்ச்சியையொட்டிய மலையோர மாவட்ட ங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2 மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. சில அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை 921 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இந்த காலகட்டத்தில் பெய்திருக்க வேண்டிய இயல்பான அளவை விட 111 சதவீதம் அதிகமாகும்.
இதே காலகட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 141 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 196 சதவீதம் அதிகம். நீலகிரி மாவட்டத்தில் 1,209 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 142 சதவீதம் அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்