search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகளை பிடிக்க"

    • சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பா ளையம் அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை நேரத்தில் ஈங்கூர் தொழிற்சா லையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பால ப்பா ளையம் தொழிற்சாலைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் தொழிற்சா லைக்கு சென்று வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் நிறுவ னத்தின் அலுவலக பணி யாளர் சத்தியமூர்த்தி பாலப்பாளையம் தொழி ற்சாலையில் பணப்பரி வர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சா லைக்கு கிளம்பி சென்றார்.

    பாலப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே ஒரு காரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்தனர். அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை அதே காரில் கடத்தி சென்றனர்.

    பின்னர் ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அருகே காரை நிறுத்தி சத்தியமூர்த்தியின் கை கால்களை கட்டி போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற னர்.

    இதுகுறித்து சென்னி மலை போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் நன்கு திட்டம் போட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதாவது பணம் கொண்டு செல்லப்பட்டது நன்கு தெரிந்து தான் இந்த துணிகர கொலையில் ஈடுபட்டு ள்ளனர். எனவே இந்த நிறுவனத்திற்கு நன்கு பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இந்நிலையில் குற்றவாளி களை கண்டுபிடிக்கும் வகையில் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொரு த்தப்பட்டிரு க்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னிமலை இன்ஸ்பெ க்டர் சரவணன் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டுள்ளது. போலீசார் ஊழியர் சத்திய மூர்த்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    ×