search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்"

    • காலை 10மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
    • வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதிகாலை 10மணிக்குதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் முதலாவதாகவிவசா யிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்க ங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமை த்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும்வேளாண் பொறியியல்துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமை க்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசா யிகள்நுண்ணீர் பாசனம்அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர்நலத்துறை மற்றும் வேளாண்சார்ந்த துறைகளால் அமைக்கப்பட வுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள்பயன்பெற கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தருமபுரி சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி சப்-கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருகின்ற 2.8.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

    தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்திவருகிறது.

    அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசின் நல திட்டங்களை பெற்று பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதம் முதல் செவ்வாய் கிழமை தருமபுரி சார் ஆட்சியர் தலைமையில் தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்திலும், அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரூர் வருவாய் கோட்டத்திலும் மேலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையிலும் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

    எனவே தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 2.8.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தருமபுரி சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி கள் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×