என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குருகிராம் ஓட்டல்"
- மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்தனர்.
- இந்தச் சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் செக்டர் 90 பகுதியில் லா ஃபாரஸ்டா கபே என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
அங்கித் குமார் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் நேற்று அங்கு சென்று உணவருந்தினார். அதன்பின், அவர்கள் ஐஸ் கலந்த மவுத் ஃப்ரெஷ்னரை சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்களது நாக்குகளில் எரிச்சல் ஏற்பட்டது. சிலருக்கு வாயில் புண் ஏற்பட்டு ரத்தம் வடியத் துவங்கியது. ஒருவர் வாந்தியும் எடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மவுத் ஃப்ரெஷ்னரில் ஏதேனும் ரசாயனம் கலந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்