search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மவுத் ஃப்ரெஷ்னரால் ரத்த வாந்தி எடுத்த குடும்பம்: ஓட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மவுத் ஃப்ரெஷ்னரால் ரத்த வாந்தி எடுத்த குடும்பம்: ஓட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    • மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்தனர்.
    • இந்தச் சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் செக்டர் 90 பகுதியில் லா ஃபாரஸ்டா கபே என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

    அங்கித் குமார் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் நேற்று அங்கு சென்று உணவருந்தினார். அதன்பின், அவர்கள் ஐஸ் கலந்த மவுத் ஃப்ரெஷ்னரை சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்களது நாக்குகளில் எரிச்சல் ஏற்பட்டது. சிலருக்கு வாயில் புண் ஏற்பட்டு ரத்தம் வடியத் துவங்கியது. ஒருவர் வாந்தியும் எடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மவுத் ஃப்ரெஷ்னரில் ஏதேனும் ரசாயனம் கலந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×