search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டும் குழியும்"

    • அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்துக்களை தடுக்கவும்,
    • முதல் கட்டமாக சத்தியாகிரக போராட்டம் நடத்துகிறோம். இதற்கு உடனே தீர்வு காணவில்லை என்றால் 10 நாட்களுக்குள் பொது மக்களுடன் சேர்ந்து அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம்

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 36 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணி குறிப்பிட்ட நாள் கடந்த பிறகும் நிறைவடையவில்லை. இதனால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்துக்களை தடுக்கவும்,

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனே சீரமைத்து தர கேட்டு வெட்டு மணி நகராட்சி அலுவலகம் முன் கவுன்சிலர்கள் சார்பில் நேற்று சத்யாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கி, பேசியதாவது:-

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அனைத்து ரோடுகளும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உடைக்கப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்தது.குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணியை நிறைவு செய்யவில்லை.இதனால் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களும் சேதம் அடைந்து ரோடுகளும் குண்டும் குழியுமாக சிதைந்து காணப்படுகிறது.

    இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்.ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. செல்போனில் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால் எடுப்ப தில்லை.இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

    உடனே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசுவதாகவும் கூறினார்.ஆனால் அதன் பிறகும் பணிகள் முறையாக நடைபெறவில்லை.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழித்துறை நகராட்சி பகுதியில் அடிப்படை வசதி எதுவும் செய்யக்கூடாது என்று கருதுகிறார்கள்.

    இதனால் நாங்கள் முதல் கட்டமாக சத்தியாகிரக போராட்டம் நடத்துகிறோம். இதற்கு உடனே தீர்வு காணவில்லை என்றால் 10 நாட்களுக்குள் பொது மக்களுடன் சேர்ந்து அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

    அதன் பிறகும் நிறைவு செய்யவில்லை என்றால் நான் குழித்துறை நகராட்சி மக்களுக்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறினார். இந்த சத்தியாகிரக போராட்டத்தில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் விஜூ, ரெத்தினமணி, ஜெயந்தி, லலிதா, சர்தார்ஷா, ரீகன், அருள்ராஜ், ரோஸ்லெட் உட்பட கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சி அளிக்கிறது.
    • அவசர காலத்தில் ஆம்புலன்சில் கொண்டு போகும் நோயாளிகள் காலதாமதமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த் தாண்டம் பகுதி மிகப் பெரிய வர்த்தக நகரம் ஆகும். இங்கு 24 மணி நேரமும் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இதனால் எப்போதும் மார்த்தாண்டம் நகரப்பகுதி நெருக்கடி நிறைந்து பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    இங்குள்ள மேம்பாலத்தின் அடிப்ப குதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ் சாலை ஆகும். இந்த சாலை பம்பம் பகுதியில் இருந்து வெட்டுமணி வரை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.பல பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இதனால் இரவு நேரங் களில் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. பகல் நேரங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அரசு பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் பள்ளி கல்லூரியில் பயி லும் மாணவ-மாணவி கள் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கும், துன்பத்திற் கும் உள்ளாகின்றனர்.

    அவசர காலத்தில் ஆம்புலன்சில் கொண்டு போகும் நோயாளிகள் காலதாமதமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின் றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    கேரளா மாநிலத்தில் ஓணம் பண் டிகை வருவதால் கேரள மக்கள் வணிக நிறுவனங்களுக்கும், மார்த்தாண்டம் காய்கறி சந்தைக்கும் பொருட் கள் வாங்க வரும்போது மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பாக மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறிய மார்த்தாண் டம் நகர வர்த்தக சங்க தலைவர் தினகர் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மனுவும் அனுப்பி உள்ளார்.

    ×