search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டம் திருவிழா"

    • திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
    • 10-ந் தேதி மாவிளக்கு பூஜையும், முரசன் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே வெள்ளியம்பதி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    10-ந் தேதி காலை 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும், முரசன் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.10-ந் தேதி இரவு 7 மணிக்கு குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பத்ரகாளியம்மன் மற்றும் கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. நாளை இரவு 7 மணிக்கு மறுபூஜை நடைபெறும்.  

    • திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
    • விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6மணிக்கு நடைபெற்றது. பூசாரிகள் மற்றும் அருளாளர்கள் குண்டம் இறங்கினர். அதன்பிறகு விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். காலை 10 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் விழா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5மணிக்கு மாவிளக்கு வழிபாடு, 6மணிக்கு பூம்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை 27-ந்தேதி சிறப்பு அபிஷேகம், கொடிஇறக்குதல், மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு அலங்காரம் (மகாலட்சுமி) நடக்கிறது.

    28-ந்தேதி காலை 9மணிக்கு ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம்(பிரத்தியங்கிராதேவி ) நடக்கிறது. 29-ந்தேதி காலை 10மணிக்கு மறு பூஜை நடக்கிறது. 

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.
    • இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    சிறுமுகை:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்குவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    வருகிற 19-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் குண்டம் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனையும், 23-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    24-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 25-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நடக்கிறது.

    தொடர்ந்து 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி காலை 10 மணிக்கு முதல் மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆடி அமாவாசை பூஜைகள், இரவு 7 மணிக்கு பரிேவட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    29-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல், ஆகஸ்டு 1-ந் தேதி காலை 10 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜை, 2-ந் தேதி மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகிறார்கள்.  

    ×