search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரையோஜெனிக் என்ஜின்"

    • மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது.
    • கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது.

    நெல்லை:

    ககன்யான் திட்டத்தின் மூலம் வருகிற 2025-ம் ஆண்டில், 3 இந்திய விண்வெளி ஆய்வாளர்கள், விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் செல்லும் ராக்கெட் ஏவும் வாகனம் மார்க்-3 (எல், வி.எம்-3) வகையை சேர்ந்தது. இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.

    இந்த ராக்கெட்டுக்கான சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அந்தவகையில் இதில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை, நெல்லை மாவட்டம் மகேந்திரிகிரியில் இஸ்ரோ வளாகத்தில் நேற்று நடந்தது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு லான்ச் வெஹிக்கிள் மார்க்-2 (எல்.வி.எம்.3) என்ற கனரக ராக்கெட் தேர்வு செய்யப்பட்டது. இது கிரையோஜெனிக் என்ஜின் மூலம் விண்வெளிக்கு இயக்கப்படுகிறது.

    இந்த கிரையோஜெனிக் என்ஜின் சோதனை 7-வது முறையாக நடத்தப்பட்டது. என்ஜின் சகிப்புத்தன்மை சோதனைகள், செயல்திறன் மதிப்பீடு, கலவை விகிதம் மற்றும் உந்து சக்தி தொட்டி அழுத்தம் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன.

    தற்போது, மனித மதிப்பீடுகளின் தரநிலைகளுக்கு சிஇ-20 என்ஜின் தகுதி பெற, 4 என்ஜின்கள் வெவ்வேறு இயக்க நிலைமைகளின் கீழ் 8 ஆயிரத்து 810 வினாடிகளுக்கு 39 முறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. குறைந்தபட்ச மனித மதிப்பீடு தகுதித் தேவையான 6 ஆயிரத்து 350 வினாடிகள் நடந்தது. இதன் மூலம் தரைத் தகுதிச்சோதனைகள் நிறைவடைந்துள்ளன.

    ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. ககன்யான் பணியின் வளர்ச்சியை நோக்கிய ஒரு பெரிய நகர்வில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது பெருமிதம் அளிக்கிறது என்றனர்.

    • 1980-களின் பாதியில் தான் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புக்கான ஆய்வுகளை தொடங்கியது.
    • இஸ்ரோவின் வெற்றிக்கு தனிநபர் காரணமல்ல. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற சினிமா பல்வேறு மொழிகளில் படமாக எடுக்கப்பட்டது.

    மாதவன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நம்பி நாராயணன் பற்றி இடம் பெற்ற தகவல்கள் தவறு என்று நம்பி நாராயணனுடன் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் முத்துநாயகம், சசிகுமார், நம்பூதிரி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தில் இடம்பெற்ற பல தகவல்கள் தவறு. நம்பி நாராயணனை கைது செய்ததால் தான் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு தாமதம் என்பதும் தவறு.

    1980-களின் பாதியில் தான் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புக்கான ஆய்வுகளை தொடங்கியது.

    அப்போது அதன் திட்ட இயக்குனராக இ.வி.எஸ்.நம்பூதிரி நியமிக்கப்பட்டார். என்ஜினின் 12 கட்டங்கள் வரை இ.வி.எஸ்.நம்பூதிரி தலைமையிலான குழுவினரே தயாரித்தனர்.

    அந்த சமயத்தில் நம்பி நாராயணனுக்கு கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அதன்பின்னர் ஞானகாந்தியின் தலைமையில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு விரிவுபடுத்தும் பணிகள் நடந்தது. அதிலும் நம்பிநாராயணன் இடம்பெறவில்லை.

    அதன்பின்பு 1990-ல் கிரையோஜெனிக் உந்துவிசை இயக்க திட்டத்தை திரவ உந்துவிசை திட்ட மையத்தில் தொடங்கியபோது நம்பிநாராயணனை திட்ட இயக்குனராக முத்துநாயகம் நியமித்தார்.

    இஸ்ரோவின் வெற்றிக்கு தனிநபர் காரணமல்ல. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    ×