search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி சிறுவர் பூங்கா"

    • சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா.
    • பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா. இது சுமார் 22 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது.

    இங்குள்ள பாம்பு பண்ணை, பறவைகள், முதலை பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் ரசித்து செல்கிறார்கள். ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து உள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர்.

    வன உயிரினங்களின் அமைவிடங்கள், இயற்கையாக காடுகளில் உள்ளது போல் உருவாக்கப்பட உள்ளது.

    மேலும் சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதி மேம்பாடு, பறவைகள், விலங்குகளின் சிறப்பம்சங்கள், அவற்றின் வாழ்வியல் முறை உள்ளிட்டவற்றை அறிய அவற்றின் இருப்பிடங்களின் அருகில் கியூ ஆர் கோடு அமைத்தல், புதிய உள் கட்டமைப்பு வசதி, டிக்கெட் கவுண்டர், உணவகம், வாகன நிறுத்தும் இடம், உலகத்தரத்தில் அரங்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த சீரமைப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த சீரமைப்பு பணி தொடர்ந்து 6 மாதங்கள் நடைபெற இருக்கிறது. எனவே கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்கள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளன.

    இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, "கிண்டி சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இயற்கை தோட்டங்கள், நிரூற்றுகள், விலங்குகள் பற்றி அறிய அதன் இருப்பிடத்தில் கியூ ஆர் கோடு அமைக்கப்பட உள்ளது. சீரமைப்பு பணி நடைபெறுவதையடுத்து 6 மாதங்கள் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படும்" என்றார்.

    • தினமும் காலை அனைத்து பறவைகளின் மீதும், கூடுகளின் மீதும் விலங்கினங்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஊழியர்கள் உடலை குளிரச் செய்கின்றனர்.
    • பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்று கிண்டி சிறுவர் பூங்கா.

    சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் குரங்கு, முதலை, நரி, ஈமு கோழி, தீக்கோழி, ஆமை, மான், பாம்பு என 500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள்,மயில், கொக்கு, நாரை, கிளிகள் என 300- க்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.

    தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பார்வையாளர்களும் வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் பொதுமக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

    சென்னையில் தற்போது வெயிலின் அகோரம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பறவைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு நட வடிக்கைகளை பூங்காவில் உள்ள வனத்துறையினர் எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக வெயிலினால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உடல் அலர்ஜி ஏற்படாத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

    தினமும் காலை அனைத்து பறவைகளின் மீதும், கூடுகளின் மீதும் விலங்கினங்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஊழியர்கள் உடலை குளிரச் செய்கின்றனர்.

    இதுமட்டுமல்லாமல் வெயில் காலத்துக்கு ஏற்ற தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

    பூங்காவில் தீ பரவாமல் இருக்க காய்ந்த மரங்களின் செடிகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன. சில விலங்குகள் கோடை வெப்பத்தை தாங்கும் வகையில் சிறப்பு கூண்டுகளில் அடைக்கப்பட்டு வருகிறது.

    வண்டலூர் விலங்கியல் பூங்காவிலும் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க ஷவர் மூலம் யானைகளுக்கு குளியலும், மலைப்பாம்புகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விலங்கினங்களின் கூண்டுகளின் மீது தண்ணீரை தெளிப்பதுடன் நீர்சத்து உள்ள பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.

    ×