search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிடைக்காததால்"

    • 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.
    • ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்டோர் வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகு களுக்கு விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜூலை 31-ந்தேதி நள்ளிர வுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளன.

    ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.

    கடந்த 1-ந்தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற குளச்சல் விசைப் படகுகளில் 3 படகுகள் நேற்று முன்தினம் காலை கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன.அவற்றுகளை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடைக்கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது.இது முந்தைய காலம் ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 8 படகுகள் இன்று கரை திரும்பின. இவற்றுள் குறைந்த அளவு ஓலக்கண வாய் மற்றும் தோட்டுக்கண வாய் மீன்கள் கிடைத்தன.அவற்றை மீன் ஏலக்கூ டத்தில் குவித்து வைத்து மீனவர்கள் விற்பனை செய்தனர். தற்போது விசைப்படகுகளில் கணவாய் மீன்களின் சீசனா கும். குறைந்த அளவு கணவாய் கிடைத்ததால் விசைப்படகினர் டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

    • நிலக்கட லையை விவசாயிகள் பெற்று சென்றனர்.
    • ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வீடு திரும்பினார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை சுற்று வட்டார விவசாயிகளுக்கு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை நலத்திட்டங்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம். நெல்,தென்னங்கன்று நிலக்கடலை உள்ளிட்ட விதை வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களிடம் உள்ள நில ஆவணங்களை கொண்டு மானிய விலை அரசு சலுகைகளால் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாபேட்டை வேளாண்மை அலுவல கத்தில் மானிய விலையில் நிலக்கடலை கிடைப்பதாக தகவல் அறிந்து விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்து கிலோ ரூ15 வீதம் தலா 20 கிலோ நிலக்கட லையை விவசாயிகள் பெற்று சென்றனர்.

    இதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைத்ததால் மற்றவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த குறிச்சி பகுதி விவசாயிகள் 2 வது நாளாக நேற்றும் வேளா ண்மை அலு வலகத்துக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் வேளாண் அலுவலர்களிடம் கேட்ட பொழுது நிலக்கடலை தீர்ந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வீடு திரும்பினார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் அரசு விவசாயி களுக்கு என தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்தி ட்டங்களை வழங்கி வருகிறது.

    இதுகுறித்த விபரங்களை அலுவலர்கள் விவசாயிகளுக்கு முறையாக தெரி விப்பதில்லை அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அரசு சலுகைகள் குறித்து தெரிவித்து அவர்களுக்கு மட்டு மே வழங்கி வருகின்றனர்.

    ஏழை எளிய விவசாயிகளுக்கு எந்தவித தகவலும் முழுமை யாக கிடைப்பது இல்லை. அரசு அனைத்து விவசாயி களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்படுத்துவதால் எங்களைப் போன்ற சிறுகுறுவிவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் வட்டாரத்தில் உள்ள அனைத்து சிறுகுறு விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி தகவல் முறையாக தெரிவிக்கப்பட்டு பின்னர் மானிய விலை பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    ×