search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி தூக்குபோட்டு தற்கொலை"

    கருவடிக்குப்பத்தில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் மேயர் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது73). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். ஆனாலும் அவ்வப்போது நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் சுந்தரமூர்த்தியின் மனைவி விஜயா நேற்று அருகில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது சுந்தரமூர்த்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அங்குள்ள மதுகடைக்கு சென்று மதுகுடித்த அவர் பின்னர் வீட்டின் குளியலறையில் இரும்பு கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குணாளன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் அரசன்குளம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது53). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்து வந்தும் நோய் கொடுமை தீரவில்லை.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி நேற்று வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×