search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய் ஆக்கிரமிப்பு"

    • நயினார்பாளையம் 4 முனை சந்திப்பிலிருந்து சின்னசேலம் செல்லும் வழியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
    • ஒரு தனி நபருக்காக 2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாமல் 100 மீட்டர் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் (வயது 65 )கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருவதாகவும், மகன் சுரேஷ் திருமணமாகி வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு நயினார்பாளையம் 4 முனை சந்திப்பிலிருந்து சின்னசேலம் செல்லும் வழியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த குமரனுக்கு குத்தகைக்கு விட்டதாக கூஇவர்களுடைய நிலத்தின் அருகே செல்வம் என்பவருடைய நிலம் இருக்கிறது .

    செல்வம் நிலத்திற்கு செல்ல வழி இல்லை. எனவே இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பு குமரனிடம் தன்னுடைய நிலத்திற்கு செல்ல உங்களுடைய பட்டா நிலத்தில் 2 சென்ட் நிலம் கொடுங்கள். அதற்கு பதிலாக பணம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .அதற்கு குமரன் மறுப்பு தெரிவித்ததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.இந்தநிலையில் குமரன் நிலத்திற்கு அருகே நீர்நிலை புறம்போக்கு இருப்பதை அறிந்த செல்வம் பொதுப்பணி துறைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.இது சம்பந்தமாக நீர்நிலை புறம்போக்கை அகற்ற போகிறோம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் ஏதும் கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை ேஜ.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றியது. இதில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள நீர் நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை குமரனுக்கு சொந்தமான நிலத்தில் மட்டுமே அகற்றியுள்ளனர்.

    ஆக்கிரமிப்பை அகற்றும் போது தென்னை மரத்தை பெண் ஒருவர் கட்டிபிடித்து அழுத்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.பொதுவாக விவசாய நிலத்தில் பயிர்கள் இருந்தால் அதற்கான கால அவகாசம் வழங்கி பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது அரசு வழிமுறைகளில் ஒன்றாகும். இதனை மீறி ஒருதலை பட்சமாக பொதுப்பணித்துறை செயல்பட்டதாக கூறப்படுகிறது . இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்தார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார் ஒரு தனி நபருக்காக 2 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றாமல் 100 மீட்டர் மட்டுமே ஆக்கிரமிப்பை பொதுப்பணி துறை அதிகாரிகள் அகற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை காலி செய்தனர்
    • மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல்

    வாணியம்பாடி:

    நீர்நிலை ஆக்கிரமிப்பு களை அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு

    வாணியம்பாடி கோவிந்தாபுரம் ஏரியிலிருந்து பாலாறு வரை செல்லும் 3,800 மீட்டர் நீள ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நட வடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகளை உடனடியாக அப்புறப்ப டுத்துமாறு. அங்குள்ள குடும்பத்தி னருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 50 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

    வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டி யன் ஆகியோர் தலைமை யிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு தங்கி இருந்த 20 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்கள் உடனடியாக தங்குவதற்கு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். சில நாட்களில் 20 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
    • பொதுமக்கள் சாலை மறியல்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் பொதுமக்கள் மறியல் காரணமாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற் றுவதற்கான அளவீடு பணி நடந்தது. அரக்கோணம்-திருத்தணி பிரதான சாலையில் மங்கம்மா பேட்டை மேம்பாலம் அருகே செந்தில் நகர் பகுதி யில் ஆக்கிரமிப்புகளால் கால்வாய் இருந்தஇடம் தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வெளியேறாமல் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வெளியே றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த 13-ந் தேதி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் தாசில்தார் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்ட னர்.

    இதனை தொடர்ந்து அப்ப குதிபொது மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் மனு மீதான நடவடிக்கை யாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு செய்யும் பணி நேற்று நடை பெற்றது.

    அப்போது தலைமை நில அலுவலர் ரவி, கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, பாரஞ்சிவரு வாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா, கைனூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர், ராஜு மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    • கலெக்டர் முருகேஷ் உத்தரவு
    • வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக 12 தாலுகாக்களுக்கும் துணை கலெக்டர் நிலையில் 12 நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக் குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மை குழு ஆகிய 4 குழுக்கள் மற்றும் 4 நகராட்சிகளுக்கும் நகராட்சி ஆணையர்களை நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நீர்வரத்து கால்வா ய்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டார்.

    ஒருங்கி ணைப்பு குழு கூதிரு வண்ணா மலை மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் சந்தே கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் கலெக்டர் அலுவல கத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களின் சந்தேகங்கள், மழை வெள்ள காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டணமில்லா தொலை பேசிஎண் - 1077, மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். திருவண்ணாமலை தாலுகாவை தவிர மற்ற தாலுகாக்களில் வசிப்பவர்கள் தொலைபேசி எண். 04175-1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

    மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை தொடர் மழையின் போது பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், தனலட்சுமி, மந்தாகினி, துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×