search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்"

    • மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள மோவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிறிஸ்டி, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தனர்.

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் மு.ராஜேந்திரன், பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் சரவண குமார், ஹரிஹரன் சிவசங்கர் பலர் கலந்து கொண்டனர்.

    ×