search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி குடத்துடன்"

    • கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி செம்படாபாளையம் அடுத்துள்ள கரலாமணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடமும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×