search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலபைரவர்"

    • தருமபுரி அதியமான்கோட்டை கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றது.
    • இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    தருமபுரி அதியமான்கோட்டை கால பைரவர் மிகவும் பிரசித்திபெற்றது.

    இந்தியாவில் 2 இடங்களில் மட்டுமே கால பைரவர் கோவில் உள்ளது.

    முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார்.

    இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது.

    ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர்.

    இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் கர்நாடகா மாநிலம் முக்கியமாக பெங்களூர் நகர மக்கள் மற்றும் ஆந்திர மாநில மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்.

    இதனால் மாதத்தோறும், ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கர்நாடக, ஆந்திர மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து கால பைரவரை தரிசனம் செய்கிறார்கள், மேலும் தமிழகத்தில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கால பைரவரை வழிபட்டு செல்கிறார்கள்.

    • பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.
    • பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    பைரவருக்கு மோட்ச தீபம்

    மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அது தவறு. சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார்.

    அதனால் தான் காசி தலத்திற்கு கால பைரவர் அதிபதியாக உள்ளார்.

    ஒவ்வொருவருடமும் தர்ப்பணம் பூஜையை ஆற்று ஓரமும், கடற்கரை ஓரமும் அல்லது குருமார்களை வைத்து வீட்டிலும் செய்யலாம்.

    வீட்டில் செய்யும் பூஜையை சிரார்த்தம்(திதி) பூஜை என்பார்கள். இறுதியாக பிண்டங்களை கடலிலோ,ஆற்றிலோ கரைக்கலாம்.

    மோட்ச தீபம் சிவனுக்கு ஏற்றக்கூடாது.

    அது பைரவருக்கு உரியது, சிரார்த்தம் பூஜை அல்லது மோட்ச தீபம் பைரவருக்கு ஏற்றி, மோட்சத்துக்குரிய அர்ச்சனை செய்த பின் கடைசியில் சிவனுக்கோ அல்லது விநாயகருக்கோ நெய்தீபம் ஏற்றி குடும்ப அர்ச்சனை மட்டும் செய்ய வேண்டும்.

    பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.

    எனவே இவற்றை எல்லா பூஜைகளுக்கும் பயன்படுத்தலாம்.

    பஞ்ச தீபம்

    பஞ்ச தீபம் என்பது விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த எண்ணெய் ஆகும்.

    இவற்றை தனித்தனியாக அகல்விளக்கில் ஏற்ற வேண்டும்.

    பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    • தேங்காய்- குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.
    • அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

    1.தேங்காய்- குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி-நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

    3.கொடை மிளகாய்-புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

    4.கொய்யா பழம்/ கத்திரிக்காய்-நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

    5.பீட்ருட்- ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

    6.பாகற்காய்-சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

    7.வில்வபழம்/ மாதுளம்-லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

    8.ஆரஞ்சு பழம்-தொழில் விருத்தி ஏற்படும்.

    9.அன்னாசிப்பழம்-சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

    10.பப்பாளி பழம்-திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    11.இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

    12.வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கைஅமையும்.

    13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

    • கண்திருஷ்டி நாசம் விலகும். தீய சக்திகள் விலகி சத்ரு சம்ஹார பைரவரின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.
    • இந்த யாகத்தால் எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

    தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

    இது தவிர கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று தட்சிண காசி காலபைரவருக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

    வரமிளகாய் யாகம்

    பைரவர், பகுலாமுகி, மோகினி, சக்திகளை கலசத்தில் ஆவாகனம் செய்து பகுலாமுகிக்கு பிடித்த வரமிளகாய் , பைரவருக்கு பிடித்த மிளகும், மோகினி சக்திக்கும் பிடித்த வேப்பெண்ணை மற்றும் பூசணி கொண்டு யாகம் நடத்தப்படுகிறது.

    இந்த யாகத்தால் எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

    கண்திருஷ்டி நாசம் விலகும். தீய சக்திகள் விலகி சத்ரு சம்ஹார பைரவரின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.

    • தமிழகத்தில் நாய்களுக்கு பைரவர் எனவும் பொதுப்பெயர் உண்டு.
    • இதில் சுவர்ண பைரவர் சிறப்பு பைரவ தோற்றங்களுடன் காட்சி தருகின்றார்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை, மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.

    கால பைரவரின் சிறப்பு பெயர்கள்

    சிவபெருமானின் 64 திருமேனிகளுள் பைரவரும் ஒருவராவார். பைரவரின் வாகனம் நாய் என குறிப்பிடப்படுகிறது.

    தமிழகத்தில் நாய்களுக்கு பைரவர் எனவும் பொதுப்பெயர் உண்டு.

    பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

    மகா பைரவர் எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவராகவும் 64 பணிகளை செய்ய 64 பைரவர்களாக விளங்குவதாக நம்பப்படுகிறது.

    இதில் சுவர்ண பைரவர் சிறப்பு பைரவ தோற்றங்களுடன் காட்சி தருகின்றார்.

    • ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்.
    • அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

    "ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே "கால பைரவ அஷ்டமி" எனப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும்.

    அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

    அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும்.

    சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது.

    ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு ஆகும்.

    பைரவர் அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

    பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

    அவை வருமாறு:

    1.நீலகண்ட பைரவர்

    2.விசாலாட்ச பைரவர்

    3.மார்த்தாண்ட பைரவர்

    4.முண்டனப்பிரபு பைரவர்

    5.ஸ்வஸ்சந்த பைரவர்

    6.அதிசந்துஷ்ட பைரவர்

    7.கேர பைரவர்

    8.சம்ஹார பைரவர்

    9.விஸ்வரூப பைரவர்

    10.நானாரூப பைரவர்

    11.பரம பைரவர்

    12.தண்டகர்ண பைரவர்

    13.ஸ்தாபாத்ர பைரவர்

    14.சீரீட பைரவர்

    15.உன்மத்த பைரவர்

    16.மேகநாத பைரவர்

    17.மனோவேக பைரவர்

    18.சேத்ர பாலக பைரவர்

    19.விருபாட்ச பைரவர்

    20.கராள பைரவர்

    21.நிர்பய பைரவர்

    22.ஆகர்ஷண பைரவர்

    23.ப்ரேக்ஷத பைரவர்

    24.லோகபால பைரவர்

    25.கதாதர பைரவர்

    26.வஞ்ரஹஸ்த பைரவர்

    27.மகாகால பைரவர்

    28.பிரகண்ட பைரவர்

    29.ப்ரளய பைரவர்

    30.அந்தக பைரவர்

    31.பூமிகர்ப்ப பைரவர்

    32.பீஷ்ண பைரவர்

    33.ஸம்ஹார பைரவர்

    34.குலபால பைரவர்

    35.ருண்டமாலா பைரவர்

    36.ரத்தாங்க பைரவர்

    37.பிங்களேஷ்ண பைரவர்

    38.அப்ரரூப பைரவர்

    39.தாரபாலன பைரவர்

    40.ப்ரஜா பாலன பைரவர்

    41.குல பைரவர்

    42.மந்திர நாயக பைரவர்

    43.ருத்ர பைரவர்

    44.பிதாமஹ பைரவர்

    45.விஷ்ணு பைரவர்

    46.வடுகநாத பைரவர்

    47.கபால பைரவர்

    48.பூதவேதாள பைரவர்

    49.த்ரிநேத்ர பைரவர்

    50.திரிபுராந்தக பைரவர்

    51.வரத பைரவர்

    52.பர்வத வாகன பைரவர்

    53.சசிவாகன பைரவர்

    54.கபால பூஷண பைரவர்

    55.ஸர்வவேத பைரவர்

    56.ஈசான பைரவர்

    57.ஈசான பைரவர் முண்டாக்தாரிணி

    58.ஸர்வபூத பைரவர்

    59.கோரநாத பைரவர்

    60.பயங்க பைரவர்

    61.புத்திமுக்தி பயப்த பைரவர்

    62.காலாக்னி பைரவர்

    63.மகாரௌத்ர பைரவர்

    64.தட்சிணா பிஸ்திதி பைரவர்

    • ஓம் அகந்தையழிப்பவனே போற்றி!
    • ஓம் ஆனந்த பைரவனே போற்றி!

    ஓம் பைரவனே போற்றி!

    ஓம் பயநாசகனே போற்றி!

    ஓம் அஷ்டரூபனே போற்றி!

    ஓம் அஷ்டமி தோன்றலே போற்றி!

    ஓம் அயன்குருவே போற்றி!

    ஓம் அறக்காவலனே போற்றி!

    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி!

    ஓம் அடங்காரின் அழிவே போற்றி!

    ஓம் அற்புதனே போற்றி!

    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி!

    ஓம் ஆனந்த பைரவனே போற்றி!

    ஓம் ஆலயக்காவலனே போற்றி!

    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி!

    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி!

    ஓம் உக்ர பைரவனே போற்றி!

    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி!

    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி!

    ஓம் உன்மத்த பைரவனே போற்றி!

    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி!

    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி!

    ஓம் எல்லை தேவனே போற்றி!

    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி!

    ஓம் கபாலதாரியே போற்றி!

    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி!

    ஓம் கர்வ பங்கனே போற்றி!

    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி!

    ஓம் கதாயுதனே போற்றி!

    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி!

    ஓம் கருமேக நிறனே போற்றி!

    ஓம் கட்வாங்க தாரியே போற்றி!

    ஓம் களவைக் குலைப்போனே போற்றி!

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி!

    .ஓம் கால பைரவனே போற்றி!

    ஓம் காபாலிகர் தேவனே போற்றி!

    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி!

    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி!

    ஓம் காசிநாதனே போற்றி!

    ஓம் காவல்தெய்வமே போற்றி!

    ஓம் கிரோத பைரவனே போற்றி!

    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி!

    ஓம் சண்ட பைரவனே போற்றி!

    ஓம் சட்டை நாதனே போற்றி!

    ஓம் சம்ஹார பைரவனே போற்றி!

    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி!

    ஓம் சிவத்தோன்றலே போற்றி!

    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி!

    ஓம் சிக்ஷகனே போற்றி!

    ஓம் சீர்காழித்தேவனே போற்றி!

    ஓம் சுடர்ச்சடையனே போற்றி!

    ஓம் சுதந்திர பைரவனே போற்றி!

    ஓம் சிவ அம்சனே போற்றி!

    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி!

    ஓம் சூலதாரியே போற்றி!

    ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி!

    ஓம் செம்மேனியனே போற்றி!

    ஓம் «க்ஷத்ரபாலனே போற்றி!

    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி!

    ஓம் தலங்களின் காவலனே போற்றி!

    ஓம் தீது அழிப்பவனே போற்றி!

    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி!

    ஓம் தெற்கு நோக்கனே போற்றி!

    ஓம் தைரியமளிப்பவனே போற்றி!

    ஓம் நவரச ரூபனே போற்றி!

    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி!

    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி!

    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி!

    ஓம் நாய் வாகனனே போற்றி!

    ஓம் நாடியருள்வோனே போற்றி!

    ஓம் நிமலனே போற்றி!

    ஓம் நிர்வாணனே போற்றி!

    ஓம் நிறைவளிப்பவனே போற்றி!

    ஓம் நின்றருள்வோனே போற்றி!

    ஓம் பயங்கர ஆயுதம் போற்றி!

    ஓம் பகையளிப்பவனே போற்றி!

    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி!

    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி!

    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி!

    ஓம் பால பைரவனே போற்றி!

    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி!

    ஓம் பிரளயகாலனே போற்றி!

    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி!

    ஓம் பூஷண பைரவனே போற்றி

    ஓம் பூதங்களின் நாதனே போற்றி!

    ஓம் பெரியவனே போற்றி!

    ஓம் பைராகியர் நாதனே போற்றி!

    ஓம் மல நாசகனே போற்றி!

    ஓம் மகோதரனே போற்றி!

    ஓம் மகா பைரவனே போற்றி!

    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி!

    ஓம் மகா குண்டலனே போற்றி!

    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி!

    ஓம் முக்கண்ணனே போற்றி!

    ஓம் முக்தியருள்வோனே போற்றி!

    ஓம் முனீஸ்வரனே போற்றி!

    ஓம் மூலமூர்த்தியே போற்றி!

    .ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி!

    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி!

    ஓம் ருத்ரனே போற்றி!

    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி!

    ஓம் வடுக பைரவனே போற்றி!

    ஓம் வடுகூர் நாதனே போற்றி!

    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி!

    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி!

    ஓம் வாரணாசி வேந்தே போற்றி!

    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி!

    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி!

    ஓம் விபீஷண பைரவனே போற்றி!

    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

    • சுண்டல், வடை,பாயசம், சர்க்கரைப் பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும்.
    • இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கை கூடும்.

    பால்,இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாய் மான் தோலில் அமர்ந்து தினம் 1008 வீதம் உரு ஜெபித்து பூஜிக்க வேண்டும்.

    சுண்டல், வடை,பாயசம், சர்க்கரைப் பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

    ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். அகந்தை பொய், அக்கிரம அநியாயக்காரர்களை அழித்து நீதியை நிலைநாட்டும் குறிக்கோளோடு வடிவம் எடுத்தவர்.

    செய்வினை, சூனிய கோளாறுகள், பேய், பிசாசு, முனி, காட்டேரி போன்ற பாதிப்பிலிருந்து நீங்க யந்திரத்தை 108 உரு ஜெய பூஜை செய்து கையில் தாயத்தாக அணிந்து கொள்ளலாம்.

    இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கை கூடும்.

    • கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.
    • மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர்.

    முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.

    பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.

    கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.

    சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.

    ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.

    ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

    பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

    மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர்.

    தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்புபைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    • சிம்ம ராசியினர் ஞாயிறுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும்.
    • சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார்.

    ஞாயிறுக்கிழமை

    சிம்ம ராசியினர் ஞாயிறுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும்.

    இந்த கிழமையில் சிம்ம ராசி ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடை பெறும்.

    திங்கட்கிழமை

    கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியா வட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

    செவ்வாய்க்கிழமை

    மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும்.

    மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருள் திரும்ப பெறலாம்.

    புதன்கிழமை

    மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

    நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.

    வியாழக்கிழமை

    தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக் கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

    குறிப்பாக வியாழக் கிழமையில் விளக் கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.

    வெள்ளிக் கிழமை

    ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம்.

    வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சஸ்கரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

    சனிக்கிழமை

    மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும்.

    சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார்.

    இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

    மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபாட்டால் காலத் தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.

    • பைரவர் சிவனின் 64 திரு உருவத்தில் ஒருவர் ஆவார்.
    • பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

    சிவனின் அம்சமான கால பைரவர், எந்தெந்த நாளில், எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.

    பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார்.

    சொர்னாகர் சன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றார்.

    பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

    அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.

    பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

    அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.

    பைரவ விரதம் தொடர்ச் சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.

    ×