search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கள் பறிமுதல்"

    • திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
    • சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்ப டையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதில் 2 ஆம்னி வேன்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது கண்ட றியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவல கத்தில் நிறுத்தி வைத்தனர்.

    மேலும் 4 ஆண்டுகளாக வரி செலுத்தாத பொக்லைன் எந்திரம் மற்றும் தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கிய ஒரு கனரக வாகனமும் கண்டறியப்பட்டு, ரூ.50 ஆயிரம் வரி செலுத்தவும், ரூ.25 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கவும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து இதுபோன்ற வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறினார்.

    • கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலை கார் வெடித்தது.
    • போக்குவரத்து போலீசார் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் சாலையோரத்தில் கேட்பாரற்றும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களை பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலை கார் வெடித்தது. இந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து மாநகர போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் முக்கிய பகுதிகளில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலையோரங்களில் நிற்கும் கார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இன்று போக்குவரத்து போலீசார் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் சாலையோரத்தில் கேட்பாரற்றும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல மாநகர் முழுவதும் ரோட்டோரம் நீண்டகாலமாக நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×