என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காரிமங்கலம் விபத்து
நீங்கள் தேடியது "காரிமங்கலம் விபத்து"
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பந்தார அள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் வினோத்குமார் (வயது25). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே ஊரை சேர்ந்த அன்பு என்பவரின் மகன் ஸ்ரீநாத் (20) ஆகிய இருவரும் நேற்று தருமபுரிக்கு தனது நண்பர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது அங்கு நண்பர்களுடன் அவர்கள் புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் முடித்து விட்டு நள்ளிரவு அங்கிருந்து வினோத்குமார், ஸ்ரீநாத் ஆகிய 2 பேரும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
காரிமங்கலம்- திப்பம்பட்டி சாலை தெல்லனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் போது அந்த வழியாக கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு தொடக்கத்திலேயே தங்கள் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பந்தார அள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் வினோத்குமார் (வயது25). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் மையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் அதே ஊரை சேர்ந்த அன்பு என்பவரின் மகன் ஸ்ரீநாத் (20) ஆகிய இருவரும் நேற்று தருமபுரிக்கு தனது நண்பர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது அங்கு நண்பர்களுடன் அவர்கள் புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் முடித்து விட்டு நள்ளிரவு அங்கிருந்து வினோத்குமார், ஸ்ரீநாத் ஆகிய 2 பேரும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
காரிமங்கலம்- திப்பம்பட்டி சாலை தெல்லனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் போது அந்த வழியாக கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு தொடக்கத்திலேயே தங்கள் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X