search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள் விலையேற்றம்"

    • கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.
    • தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல்கள் நடத்துபவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக சின்ன வெங்காயமும், தக்காளியும் போட்டி போட்டு விலையேற்றம் கண்டுள்ளது. ரூ.150 வரை விலை உயர்ந்த நிலையில் இன்று ரூ.120, ரூ.100, ரூ.80 என தரம் பிரித்து விற்கப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்.

    பதுக்கல் காரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் காலங்களில் கொடைக்கானலுக்கு வரும் காய்கறிகள் லாரிகள் வாடகை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக விலை மேலும் உயர்ந்து வருகிறது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். தற்போது தக்காளி ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.150க்கும், தக்காளி ரூ.130க்கும் விற்கப்படுகிறது.

    ஆனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்க வில்லை. இடைத்தரக ர்கள்தான் பயன் அடைகின்றனர். எனவே அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

    • தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரூ.120க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி இன்று மீண்டும் விலையேறி 1 கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது. இதே போல் இஞ்சி ரூ.280, வெங்காயம் ரூ.100 என்று விற்பனையாகி வருகிறது.

    மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர். தக்காளி, வெங்காயத்தின் விலை சிக்கன் விலைக்கு விற்பதால் காய்கறிகள் வாங்குவதை விட சிக்கன் வாங்கி சமைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மார்க்கெட்டுகளில் ரூ.500க்கு காய்கறிகள் வாங்கினால் 1 வாரத்துக்கு வைத்து சமையல் செய்து கொள்ளலாம் என்ற நிலை மாறி ரூ.500க்கு காய்கறிகள் ஒரு நாளைக்கே போதாது என்ற நிலை வந்து விட்டதாகவும் புலம்புகின்றனர். காய்கறிகள் விலை அதிகரித்து வந்தாலும் இதன் லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் விவசாய தோட்டங்களுக்கே சென்று காய்கறிகளை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் ரூ.100க்கு விற்கப்பட்டாலும் விவசாயிக்கு கிடைப்பது ரூ.30 முதல் ரூ.40 வரைதான் என்று வேதனையடைந்து வருகின்றனர்.

    சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. அய்யம்பட்டியில் தற்போது அவரைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. வருடத்துக்கு 3 முறை காய் எடுத்து வரும் நிலையில் தற்போது 2ம் கட்ட அறுவடை பணி நடந்து வருகிறது. ரூ.80க்கு விற்கப்பட்டு வரும் அவரைக்காய் தற்போது விவசாயிகளிடம் ரூ.40 முதல் ரூ.45 வரை மட்டுமே வாங்கப்பட்டு வருகிறது. இதனால் சந்தையில் விலை ஏறினாலும் விவசாயிகளுக்கு எவ்வித லாபமும் கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×