search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி விதைகள்"

    • காய்கறி விதைகள் இலவசமாக வழங்கும் முகாமை கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்தார்.
    • காய்கறி விதைகளை, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகள் இலவசமாக வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி முன்னிலை வகித்தார்.

    பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட விதை தொகுப்பை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

    மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை மூலம் 5 ஆயிரம் ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகள் இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆடிப்பட்டத்தில் காய்கறி விதைத்து, தை மாதம் அறுவடை செய்யலாம், பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளி, பிராணவாயு, நல்ல மழை கிடைக்கும்.

    கோடைக்காலங்களில் இறுகி மண், ஆனி மழையில் தளர்ந்து காணப்படும். மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும். இதனால் மண் செழிப்பதோடு விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை ஊக்குவிக்கிறது. பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும்.

    ஆடி மாதம், அவரை, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகற்க்காய், சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, பீர்க்கங்காய், கீரை, புடலங்காய், சாம்பல் பூசணி, முருங்கை உள்ளிட்டவை விதைக்கலாம். இந்த வகையான காய்கறி விதைகள், தற்போது இலவசமாக வழங்கப்படும் தொகுப்பில் உள்ளன. இதனை விவசாயிகள், வீட்டு காய்கறித்தோட்டம் அமைக்க விரும்பும் பொதுமக்கள் தொடர்புடைய தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • முகாமில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.
    • வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார்.

    திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மான்யங்கள் பற்றி பேசினர்.இதில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்றதுணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×