search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணிக்கை எண்ணும் பணி"

    • ரூ.2.17 லட்சம் வசூல்
    • 217 கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்ஷன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சிவலிங்கம், கண்காணிப்பாளர் ஆறுமுகம், செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் கோயில் மேலாளர் மகாதேவன், எழுத்தர் சீனிவாசன், படவேடு இந்தியன் வங்கி உதவி மேலாளர் ராஜா, உள்பட 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உண்டியல் எண்ணும் பணியை செய்தனர்.

    இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.2,17,604-ம், 217கிராம் தங்கம், வெள்ளி 317 கிராமும் செலுத்தியிருந்தனர்.

    • ரூ.11.50 லட்சம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி கிடைத்தது
    • பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை செலுத்துகின்றனர்

    அணைக்கட்டு:

    வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் சயெ்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இந்நிலையில், நேற்று எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, வேலூர் சரக ஆய்வாளர் சுரேஷ்குமார், குடியாத்தம் சரக ஆய்வாளர் பாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    இதில், பக்தர்கள் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள், தன்னார்வ லர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    • கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது.

    கடலூர்:

    பிரசித்தி பெற்ற சிதம்பரம் தி ல்லைக்காளியம்மன் கோவிலில் இந்து அறநிலை யத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் அலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 4 லட்சத்து 40 ஆயிரத்து 648 கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு பணம் சிங்கப்பூர் டாலர் 107, மலேசியா ரிங்கட்-65, ஓமன் அரை ரியால், இலங்கை பணம் ரூ.1000 ஆகியவை இருந்தன.

    ×