search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offering Counting"

    • கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது.

    கடலூர்:

    பிரசித்தி பெற்ற சிதம்பரம் தி ல்லைக்காளியம்மன் கோவிலில் இந்து அறநிலை யத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் சரண்யா, ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோவில் அலுவலர்கள் ராமலிங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 4 லட்சத்து 40 ஆயிரத்து 648 கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம், வெள்ளி 40 கிராம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு பணம் சிங்கப்பூர் டாலர் 107, மலேசியா ரிங்கட்-65, ஓமன் அரை ரியால், இலங்கை பணம் ரூ.1000 ஆகியவை இருந்தன.

    ×