search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம்"

    • கலெக்டர் மா.ஆர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணல் காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி கலந்துகொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.
    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் உமாபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடிக்காத நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி 2022-2023-ம் ஆண்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சிக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.

    பயிற்சி கட்டணம் ரூ.15,050 ஆகும். விண்ணப்பத்தினை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நேரிடையாக ரூ.100 ரொக்கமாக மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்கள் 28.7.22 தேதி வரையில் (விடுமுறை நீங்கலாக) வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 1.8.22. இதர விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 044-27237699-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.07.2022 மற்றும் 02.07.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியரகம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆகியோரால் இளைஞர் திறன் பயிற்சிக்கான www.kanchiskills.in என்ற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

    மேலும் அனைத்து துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் பயிற்சி தொடர்பான வேலைவாய்ப்பு விவரங்கள், சுயதொழில் முனைவோருக்கான வழிக்காட்டுதல்கள், திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் குறித்த விவரங்கள் இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயற்சியளிக்கும் அரசுத்துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தலா 1 வீதம் 5 இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜானா (DDU-GKY) திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஊரக ஏழை இளைஞர்களுக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கல்வி தகுதிக்கேற்ப திறன் பயிற்சி அளித்து நிரந்தர வருமானத்திற்கு வேலைவாய்ப்பு பெற்றுதரப்படுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை DDU - GKY திட்டத்தின் கீழ் 942 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

    2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கு DDU - GKY திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை, இளைஞர் திறன் திருவிழா மூலம் வட்டாரம் வாரியாக தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா தற்போது நடத்தப்படுகிறது. முதல்வர் அவர்களின் கனவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் படித்த / பயிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் (Sectors) குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. திறன் பயிற்சி பெற்று வாழ்க்கையில் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தொழிற் பிரிவுகளில் (Job Role) குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் இம்மாவட்டத்தில் பல்வேறு கல்வித் தகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளார்கள். இம்மாவட்டத்தில் 2021-2022 வரை குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 367 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 509 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட கால தொழிற் பயிற்சியாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 5 தொழிற் பிரிவுகளில் (MMV, MRAC, Electronic mechanic, Technician Mechatronics, Welder) பயிற்சி அளிக்கப்பட்டு திறன்மிகு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு பெறக்கூடிய அளவில் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

    மேலும், இம்மாவட்டத்தில் 2021-2022 வரை நீண்ட கால பயிற்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டத்தில் 190 பயிற்சியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது நீண்ட கால பயிற்சியில் 119 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    மேற்கண்ட பயிற்சிகளால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மிகு பயிற்சிகள் அளிக்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், இம்மாவட்டத்தில் திறன் மிகு இளைஞர்கள் உருவாக்கப்பட்டு தொழிற் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.kanchiskills.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. சிவ ருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுரு நாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • தலைமை நீதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை தலைமை நீதிபதி வழிபட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்னை தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திடீர் வருகை புரிந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி மற்றும் அவரது மனைவி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முனிரத்தினம் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை  தலைமை நீதிபதி வணங்கி வழிபட்டார். அவருக்கு அர்ச்சகர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் ஸ்தானிகர் சியாமா சாஸ்திரிகள் பிரசாதங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    ×