search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பட்டய பயிற்சி
    X

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பட்டய பயிற்சி

    • கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.
    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் உமாபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடிக்காத நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி 2022-2023-ம் ஆண்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சிக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.

    பயிற்சி கட்டணம் ரூ.15,050 ஆகும். விண்ணப்பத்தினை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நேரிடையாக ரூ.100 ரொக்கமாக மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்கள் 28.7.22 தேதி வரையில் (விடுமுறை நீங்கலாக) வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 1.8.22. இதர விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 044-27237699-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×