search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிவிசுவநாதர் கோவில்"

    • திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு நடை பெற்றது.
    • நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம்,  திருமக்கோட்டை, ஞானபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திக்கும், சிவனுக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைப்போல் நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குருபரிகார கோவிலில் ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பூவனூர் கல்யாணி அம்மன் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

    வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×