search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashiviswanath Temple"

    • 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான கோவிலான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும், கொடியேற்றத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள் நடைபெற்றன.

    விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் தேர் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.

    தேரினை ஏராளமான பக்தர்கள் திருவாசகம் பாடி, கோஷங்கள் எழுப்பி, பாடல்கள் பாடி, மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • ராமநாதபுரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள தொன்னை குருசாமி சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட 300ஆண்டுகள் பழமையான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரத்தில் மிகவும் பழமையான இக்கோவிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புணரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 30-ந்தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.

    2 நாட்கள் மூன்றுகால யாக பூஜைகள் நடைபெற்று. நேற்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் தீபாரா தனை பூர்ணாகுதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தி யங்கள் முழங்கயாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் வேதவிற்பன்னர் கள் ஊர்வலமாக விமானங்களுக்கு எடுத்து வந்த னர். மூலஸ்தானம், ராஜ கோபுரம், பரிவாத தெய்வங்கள் அனைத்திற்கும் வேத மந்திரம் முழங்க சிவாய நம மந்திரம் ஒலிக்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவா மிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீப ஆராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர். சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு நடை பெற்றது.
    • நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம்,  திருமக்கோட்டை, ஞானபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திக்கும், சிவனுக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைப்போல் நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குருபரிகார கோவிலில் ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பூவனூர் கல்யாணி அம்மன் கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

    வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி, கைலாசநாதர், வடிவழகி அம்மன் ஆகிய சாமிகளுக்கு மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×