search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காகித அட்டைப்பெட்டி தயாரிப்பு"

    • இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
    • விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    கோவை மண்டல தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தலைவா் சிவகுமாா் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மண்டலத்தில் திருப்பூா், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூா், சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில் 700 அட்டைப்பெட்டி தயாரிப்பு உற்பத்திக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். தினசரி ரூ. 3.5 கோடி மதிப்பிலான அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். காகிதத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. ஆனால் காகித அட்டைப்பெட்டிக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. இதனை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏற்றுமதி வரி சலுகை அளிப்பதோடு வெளிநாட்டில் இருந்து ஆா்டா்கள் கிடைக்க மத்திய அரசின் தொழில் துறை உதவ வேண்டும். காகித அட்டைப்பெட்டி தொழில் மேம்பாடு அடைய சா்வதேச அளவிலான கண்காட்சிகளை மத்திய அரசு நடத்த வேண்டும். காகித அட்டைப்பெட்டி தயாரித்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் பொருளாதாரம் மேம்பாடும் வகையில் மத்திய, மாநில அமைச்சா்கள், அரசு உயா் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கவுள்ளேன் என்றாா்.

    ×