search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுந்தப்பாடி பகுதியில்"

    • கவுந்தபாடி பகுதியில் இன்று காலை வரை 15 செ.மீ மழை தொடர்ந்து கொட்டி தீர்த்தது.
    • போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    ெதாடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இதே போல் நேற்றிரவு மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலே அதிக அள வில் மழை கவுந்தபாடி பகு தியில் பெய்தது. நேற்று மதி யம் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை 15 செ.மீ தொடர்ந்து கொட்டி தீர்த்தது.

    இதனால் பனங்காட்டூர், அய்யம்பாளையம், வண்ணார் மடை, பாப்பாங் காட்டூர், தென்காட்டு பாளையம், பொம்மட்டி, செந்தம்பாளையம், சலங்க பாளையம், கண்ணாடிபுதூர், க. புதூர் மற்றும் பி.மேட்டு ப்பாளையம் பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஈரோடு ரோடு, அய்யம்பா ளையம் தரை மட்ட பாலம், பனங்காட்டூர் தரைமட்ட பாலம், கவுந்தப்பாடி, பொம்மபட்டி தரைமட்ட பாலம், அய்யம்பாளையம், ஆண்டி பாளையம், வண்ணார்மடை தடை மட்ட பாலம் ஆகிய பால ங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மழை வெள்ளம் அதிகமானதால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்த னர்.

    கன மழையால் பாப்பா ங்காட்டூர் பகுதியில் 2 மின் கம்பங்கள் சாய்ந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மின் வாரியத்தினர் அதிகா லையில் மின் இணைப்பைத் துண்டித்து சரி செய்தார்கள்.

    மேலும் கண்ணாடிப்பு தூர், கவுந்தப்பாடி, சலங்க பாளையம் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெ ருக்கு எற்பட்டது. மேலும் ஓடத்துறை ஏரி, பி.மேட்டு ப்பாளையம் அனந்த சாக ரம் ஏரியும் நிறைந்து ஓடி யது.

    இதில் ஓடத்துறை, கவு ந்தப்பாடி ஊராட்சி, பி.மேட்டுப்பாளையம் பேரூரா ட்சி பகுதி துப்புரவு பணி யாளர்கள் வெள்ளப்பகு தியில் தடுப்பு ஏற்படுத்திய குப்பை மற்றும் செடிகளை அகற்றி வருகிறார்கள்.

    இதேபோல் கவுந்தபாடி அடுத்த பொம்மன்பட்டி நடுநிலைப்பள்ளி வளா கத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிபட்டனர்.

    ஈரோடு மாவட்ட அணை பகுதிக ளான வரட்டுபள்ளம், குண்டேரிபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கவுந்தபாடி-152, எலந்த குட்டைமேடு-101, கோபி-80, கொடிவேரி-62, பவானி சாகர்-40, சத்தி-34, நம்பி யூர்-28, கொடிமுடி -20, வரட்டுப்ப ள்ளம் அணை-7, ஈரோடு-7, குண்டேரிப ள்ளம்-6, மொடக்குறிச்சி-6.

    • மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.
    • விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி பொம்மன்பட்டி பிரமாண்டியூர் பகுதியை சேர்ந்த விவசாயி செங்கோ ட்டையன். இவர் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

    தற்போது கரும்பு பயிர் 60 நாள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பயிர் வளர்ச்சி அடையவும், அதிகமாக மகசூல் பெறவும் மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.

    இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

    மேலும் விவசாயி செங்கோட்டையன் இதுகுறித்து கூறும்போது:- கரும்பினுடைய வளர்ச்சிக்கு இந்த மைக்ரோ நுண்ணூ ட்டக் கலவையை பயிர்கள் மீது தெளித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும் மற்றும் அதிக மகசூல் கிடை க்கும்

    மேலும் மண்ணில் உள்ள நுண்ணூட்ட பற்றாக்குறை வினால் இவை பயன்படுத்த வேண்டி உள்ளது. சராசரி யாக ஒரு முறை இந்த டிரோன் மூலம் நுண்ணூ ட்டத்தை தெளிக்க ஒரு ஏக்கருக்கு சராசரி ரூ.900 செலவாகிறது. இருந்தும் பயிர்களின் வளர்ச்சிக்காக இதை செய்ய வேண்டி உள்ளது என்றார்.

    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கவுந்தப்பாடி, கொளத்துபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம்,

    தர்மாபுரி, கே.புதூர், மாரப்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாள்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம் பாளையம், குஞ்சரமடை,

    ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணிக்கவலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலிமேடு தங்கமேடு, சேவாகவுண்டனூர், ஆலத்தூர்,

    கவுண்டன்பாளையம் குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம் போன்ற பகுதியில் மின் நிறுத்தம் இருக்காது என செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ×