search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர் ஓடை"

    • வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

    இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற் பொறியாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது 28-வது வார்டு கவுன்சிலர் சந்திர சேகர் பொதுமக்களுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    28-வது வார்டுக்குட்பட்ட பாரதியார் தெருவில் உள்ள ரேஷன் கடையின் மேல் பகுதியில் காசிபிள்ளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மேற்கூரை பெயர்ந்து காணப்படு வதுடன், மாடிக்கு செல்லும் படிகள் மோசமாக உள்ளது.எனவே அதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும்.

    டவுன் வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே 4 பகுதிகளிலும் உள்ள கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது. பூதத்தார் சன்னதி தெருவில் உள்ள கழிவுநீர் ஓடைகள் பழு தடைந்து சாலைகளில் கழிவு நீர் செல்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தச்சை மண்டலம் 2-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் சுந்தரா புரம் ஆர்.எஸ்.ஏ. நகர், வடக்கு கரையிருப்பு உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்த செல்லத் துரை, அந்தோணி, பண்டாரம் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் இருந்து மதுரை மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. எனவே உடனடியாக அங்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொம்பாபிஸ் நிழற்குடை பாதி கட்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதனை உடனடி யாக கட்டி முடிக்க வேண்டும். சிவகுமார் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய உள்ளது. ஆனால் அங்கு முட்புதர்கள் சூழ்ந்து காணப் படுகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ள னர். இதனால் உடனடியாக அதனை அகற்றி தூய்மை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மேயர் மகேஷ் கமிஷனர் ஆனந்த மோகன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதன்படி நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஒழுகினசேரியிலிருந்து பார்வதிபுரம் வரை உள்ள சாலையில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.

    ஜே.சி.பி. எந்திரம் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த சிலப்புகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் சீட்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து அங்குபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×