search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழக நிர்வாகிகள்"

    • கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டார்.கழகத் தலைவர் அசோக் குமார், பொதுச் செயலாளர் செந்தில் குமார், துணை தலைவர் சிவா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 10-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ், மாவட்ட தலைவர்கள் சுரேஷ்குமார், பச்சைமால், மாவட்ட துணை தலைவர்கள் தாஸ், ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் செல்வின் பாபு, செந்தில்குமார், நஜ்முதீன், ராஜகுமார், கிங்ஸ்லி, ஜெரால்ட், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீ பிரபி மற்றும் குமரி மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் செய்து இருந்தனர். கூட்ட முடிவில் மோகனகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகி கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகள் மற்றும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களில் புதிதாக கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, பாரதி ராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங் கோவன், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி ஏற்பாட்டில் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    ×