search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளிப்பூச்சி"

    • வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.
    • மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், பாண்ட மங்கலம், பொத்தனூர், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு நல்லி கோவில், அய்யம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர்.

    வாழை

    பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரி களுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்கப்படு கிறது.

    இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கள்ளிப்பூச்சி

    இந்த நிலையில் தற்போது வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.

    மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை. இதனால் வாழைத்தார்களை ஏலத்தில் எடுத்த வியா பாரிகள், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளிபூச்சி களை அகற்று கின்றனர்.

    இதற்கு கட்டணமாக ஒரு வாழைத்தாருக்கு 10 ரூபாய் செலவாகின்றது

    இது குறித்து வியாபாரி கள் கூறியதாவது:-

    வாழைத்தார்கள் முற்றி வெட்டும் நிலையில் உள்ள பருவ காலத்தில் வெள்ளை நிறத்தில் கள்ளிப்பூச்சி நோயால் வாழைத்தார்கள் பாதிக்கப்படுகிறது. வெளி யூர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக சுத்தமாக கள்ளிப் பூச்சியை அகற்ற வாழைத் தார்களுக்கு பீய்ச்சியடித்து சுத்தம் செய்து அனுப்பு கிறோம்.

    இந்த நேரத்தில் கள்ளிப் பூச்சி அகற்ற மருந்து அடித்தால் வாழைத்தார் சாப்பிடு பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு வாழைத்தார்களுக்கு மருந்து அடிக்காமல், தண்ணீர் மூலம் சுத்தம் செய்து வெளியூர்க ளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கள் கூறினர்.

    ×