search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களை"

    • கிழங்குகள், மஞ்சள் குலைகள் விற்பனை அமோகம்
    • கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு

    நாகர்கோவில்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டா டப்படுகிறது.பொங்கல் பண்டிகையொட்டி புதுமண தம்பதியினருக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது ஐதீகம். அதன்படி குமரி மாவட்டத்தில் புதுமணத் தம்பதியினருக்கு சீர்வரிசை பொருள்களை பெற்றோர் வழங்கி வருகிறார்கள். சீர்வரிசை பொருள்களாக பொங்கல் பானை,கரும்பு புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கடை வீதிகளில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோட்டார் மார்க்கெட் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தங்களுக்கு தேவையான பானைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். வட சேரி மார்க்கெட் அப்டா மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் கிழங்கு வகை களின் விலையும் அதிகமாக இருந்தது.

    கட்டபொம்மன் சந்திப்பு வடசேரி பகுதிகளில் சாலையோரங்களில் கிழங்கு வகைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது.மேலும் பொங்கல் தயார் செய்ய பயன்படுத்தப்படும் பனை ஓலைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மஞ்சள் குலைகள், கிழங்கு வகைகளையும் பொது மக்கள் வாங்கி சென்றனர்.

    நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மார்த்தாண்டம் தக்கலை இரணியல் அஞ்சு கிராமம் பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. துணிக்கடைகளில் புத்தா டைகள் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

    நாளை 15-ந் தேதி காலையில் வீடுகள் முன்பும் கோவில்கள் முன்பும் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்ய உள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் ஆகும். 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.எனவே சுற்றுலா தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, சொத்த விளை குளச்சல் வட்டக் கோட்டை பீச் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திற்பரப்பு அருவியிலும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்துள்ளனர். மாத்தூர் தொட்டில் பாலம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

    • பரமத்தி வட்டாரத்தில் கரும்பு, வாழை பயிரை ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகு–வாக பாதித்துள்ளது.
    • இதனால் கரும்பின் உற்பத்தித் திறன் மற்றும் தரம் பாதிக்கப்படு–கின்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி கூறியதாவது:

    பரமத்தி வட்டாரத்தில் தற்சமயம் கரும்பு பயிரிடப்படும் பல இடங்களில் சுடுமல்லி எனும் ஸ்டிரைகா ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகுவாக பாதித்துள்ளது. இது கரும்பிலிருந்து ஊட்டச்சத்து மற்றும் நீரினை உறிஞ்சிக் கொள்கின்றது. இதனால் கரும்பின் உற்பத்தித் திறன் மற்றும் தரம் பாதிக்கப்படு–கின்றது . பயிறு வகைகளான பீன்ஸ்,சோயா மொச்சை, அவரை, நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் சுடுமல்லியின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது.

    சுடுமல்லி பூக்கும் பருவம் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதன் விதைகள் கீழே விழுந்து விடாதவாறு வயலிருந்து அகற்றி எரித்து விடவேண்டும். 2,4 டி மருந்து கிடைக்கும் பட்சத்தில் அதனை மூன்று அல்லது நான்கு முறை களை எடுப்பதற்கு பதிலாக பயன்படுத்தலாம். சுடுமல்லி ஒட்டுண்ணிக் களைகளைக் கட்டுப்படுத்த முதலில் அட்ரசின் அட்டாப் 1 கி.கி /ஹெக்டர் களைக்கொல்லியை களைகள் முளைக்கும் முன் மருந்து இட வேண்டும். கரணை விதைத்த 45 நாட்களுக்குப் பின் களைகள் நீக்கமும் 90 நாட்கள் கழித்து அணைப்பது அவசியம். மேலும் விபரங்களுக்கு கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×