search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்விக் கடன்"

    • இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.
    • வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அக்டோபர் 28-இல் கல்விக் கடன் முகாம் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஷா நவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அக்டோபர் 28-ஆம் தேதி கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.

    இது தொடர்பான முழு விபரங்களை ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சித்த லைவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையை உருவாக்குவதே இந்த கல்விக் கடன் முகாமின் நோக்கம் என்று எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    கல்விக் கடன் தொடர்பாக இதுவரை தம்மிடம் மனு அளித்த அனைவருக்கும், இந்த முகாம் பற்றிய தகவலை எம்.எல்.ஏ அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளதாகவும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    ×