என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கல் குவாரி"
- கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது பள்ளியின் கட்டிடங்கள் குலுங்குவதால் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.
- பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் கூறுகின்றனர்.
தென்காசி:
ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பூலாங்குளம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருவதாகவும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது அப்பகுதியில் உள்ள பள்ளியின் கட்டிடங்கள் அதிகளவில் குலுங்குவதால் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.
பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் ஆண்டிபட்டி கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் இதனால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
எனவே இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டு ஆண்டிபட்டி அருகே செயல்பட்டுவரும் கல்குவாரி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஆண்டிபட்டி மற்றும் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மனு அளித்தனர்.
- சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
- மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக் கோரி ஒரு மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-
திருத்தணி தொகுதிக்குட்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தரக்கோரியும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு உலக வங்கி நிதி உதவி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தரக் கோரியும், தொகுதியில் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டியும், பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர கோரியும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்