என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல் குவாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்- கலெக்டரிடம் திருத்தணி எம்.எல்.ஏ புகார் மனு
- சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
- மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக் கோரி ஒரு மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-
திருத்தணி தொகுதிக்குட்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தரக்கோரியும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நபார்டு உலக வங்கி நிதி உதவி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தரக் கோரியும், தொகுதியில் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டியும், பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர கோரியும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






