search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைத்திறன் போட்டி"

    • 65-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
    • சுழற்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மார்த்தாண்டம் :

    குமரிக் கலைக்கழகத்தின் சார்பாக, மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கி டையேயான கலைத்திறன் போட்டிகள் நாகர்கோ விலில் நடைபெற்றது. அதில் 65-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணாக்கர்கள் போட்டியில் பல பிரிவுகளில் முதல் பரிசு பெற்றனர். ஆங்கில பேச்சுப்போட்டியில் 8-ம் வகுப்பு பிரிவில் ஜெரிக் பிரைட் என்ற மாணவனும், தனிநபர் பாடல் மற்றும் தமிழ் பேச்சுப் போட்டியில் ஷவின் என்ற மாணவனும், 3 முதல் 5-ம் வகுப்பு பிரிவில் தமிழ் பேச்சுப் போட்டியில் லோபிகா என்ற மாணவியும், குழு நடனப்போட்டியில் மழலையர் மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவு மாணாக்கர்களும் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு குமரிக் கலைக்கழகத் தலைவர் டாக்டர் சண்முகம் தலைமையில் சுழற்கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணாக்கர்கள் பல குறிப்பிடத்தக்கது. பரிசுகள் பெற்றது சுழற்கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வென்ற மாணவர்களை பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி, முதுநிலை முதல்வரி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி னார்கள்.

    இது மாணாக்கர்களின் தனித்திறன்களை வெளி க்கொணரும் வகையிலும் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டி களில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுவதற்கு ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்திருந்தது.

    • குரோசா -2023 கலைத்திறன் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    சுரண்டை:

    தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளியில் குரோசா -2023 கலைத்திறன் போட்டி நடைபெற்றது. இதில் அழகர் பப்ளிக், பாரத் வித்யாமந்திர், கீதா மெட்ரிக், குட் ஷெப்பெர்டு, ஹோலிகிராஸ், எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கலைத்திறன் போட்டியில் எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிவ டமோக்னஸ் ராஜேந்திரா குழுவினர் மேற்கத்திய நடனத்தில் முதலிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ஹிவஸ்திகா, சாதனா ஹரிணி ஆகியோர் ஜோடி நடனத்தில் 2-ம் இடம் பெற்றனர்.

    கணக்கதேஜஸ், சுபநந்தன் ஆகியோர் கணிதப்புதிர் போட்டியில் 3-வது இடம் பெற்றனர். குரோசா கலைத்திறன் போட்டியில் ஜீனியர் பிரிவில் எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் 3-வது இடம் பெற்றுச் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற அணியினரை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர்.

    ×