search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆனந்த்"

    பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், சில்லறை விற்பனை மதுபான கடைகள் மற்றும் அதனை சார்ந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 18-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.

    இந்த நாட்களில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிமத்தினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #LoksabhaElections2019
    ×