search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பக விநாயகர்"

    • கற்பக விநாயகர் ஆலையத்தில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.
    • இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி நாடார் பேட்டை நந்தவனத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 48-வது நாளையொட்டி மண்டலபிஷேகம் நடத்த உறவின் முறையால் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது. 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு நெல் மணிகளில் அடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    பூர்ணகுதியுடன் யாக வேள்விகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சங்குகளில் ஊற்றப்பட்ட புனித நீரை கொண்டு சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கற்பக விநாயக பெருமாளுக்கு மகா அபிஷேம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    • பிள்ளையார்பட்டி கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
    • கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதி காலை முதல் நீண்ட வரிசையில் நின்று கற்பக விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் டிரஸ்ட் சார்பில் கோவில் முழுவதும் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பக்தர்களுக்கு கழிவறை, குடிநீர், உணவு வசதி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பக விநாயகருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது.

    ×