search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கற்பக விநாயகர் ஆலையத்தில் 108 சங்காபிஷேக பூஜை
    X

    கற்பக விநாயகர் ஆலையத்தில் 108 சங்காபிஷேக பூஜை

    • கற்பக விநாயகர் ஆலையத்தில் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.
    • இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி நாடார் பேட்டை நந்தவனத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 48-வது நாளையொட்டி மண்டலபிஷேகம் நடத்த உறவின் முறையால் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது. 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு நெல் மணிகளில் அடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    பூர்ணகுதியுடன் யாக வேள்விகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சங்குகளில் ஊற்றப்பட்ட புனித நீரை கொண்டு சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கற்பக விநாயக பெருமாளுக்கு மகா அபிஷேம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் பேட்டை உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×