search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரிய காளியம்மன் கோவில்"

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், கொடி ஏற்ற நிகழ்ச்சியும் நடந்தது. 10-ந் தேதி மலர் அலங்காரமும், 11-ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பின்னர் 12-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், சுவாமி பரிவாரங்கள் உடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணி அளவில் குண்டம் விழா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை பூத வாகன காட்சியும், 15-ந் தேதி மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், 16-ந் தேதி குதிரை வாகனத்தில் தெப்பத்தேர் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 17-ந் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது.

    ×