search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரி வரதராஜ பெருமாள் கோவிலில்"

    • பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
    • புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராய பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் பாமா ருக்மணி மற்றும் கோவில் கோபுரங்கள் ஆகியவை அத்தி மரத்தினால் உருவ சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இதில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாசர்களுக்கு அரிசி, பருப்பு, புளி, காய்கறிகள் உள்ளிட்டவை கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மேலும் கோவில் திருப்பணி நடைபெற்று கொண்டி ருப்பதால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் அவர்களால் முடிந்த நிதிகளை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.

    ×