என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்கள் சேதம்"
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு காடந்தெத்தி பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்னியூஸ்டு, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு பாமக ஆகிய அரசியல் கட்சிகளின் கொடி மரங்கள் உள்ளன. நேற்று பா.ம.க. கொடி மரத்தில் இருந்த பழைய கொடியை அகற்றிய அக்கட்சியினர் புதிய கொடியை ஏற்றி காடுவெட்டி குரு இறந்ததையொட்டி அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்தில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க, கம்னியூஸ்டு கட்சிகளின் கொடி கம்பங்களை சேதப்படுத்தி உளளனர்.இதைத் தொடர்ந்து கொடி கம்பங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி இந்திய கம்னியூஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., கம்னியூஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இதுபற்றி தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவுசெய்து காடந்தெத்தியைச் சேர்ந்த பா.ம.க. ஒன்றிய விவசாய சங்க ஒன்றியத்தலைவர் காந்தி மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்