search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல்படை கேப்டன்கள்"

    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய கப்பல்படை கேப்டன்களான விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோரின் வீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு விருது வழங்கி உள்ளது. #KeralaRain #KeralaFlood
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்தது.

    மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தது.

    இதைத் தொடர்ந்து கேரளாவில் மீட்பு பணியில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. கேரள மீனவர்களும் படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலம் ஆலுவா செங்கமனநாடு என்ற இடத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தவித்த நிறைமாத கர்ப்பிணி சஜிதா என்பவரை ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப்படை கேப்டன்கள் விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோர் காப்பாற்றினார்கள்.

    ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட சஜிதா, குழந்தையுடன் சஜிதா

    விமானப்படை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மறுநாளே சுக பிரசவம் மூலம் ஆண் குழந்தையும் பிறந்தது. இதைப்போல மேலும் 26 பேரை இவர்கள் இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்கள்.

    இந்த நிலையில் விஜய் வர்மா, ராஜ்குமார் ஆகியோரின் வீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு விருது வழங்கி உள்ளது. சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் டைம்ஸ் ஆப் சிங்கப்பூர் என்ற விருது வழங்கி அவர்கள் பாராட்டப்பட்டனர். #KeralaRain #KeralaFlood
    ×