என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்னட அமைப்பினர் போராட்டம்"
- கர்நாடகாவில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
- பெங்களூருவில் கன்னட அமைப்பினர் இணைந்து வேறு மொழியில் எழுதப்பட்ட விளம்பர பலகைகளை அடித்து உடைத்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காலை முதல் கன்னட அமைப்பினர் இணைந்து கன்னட மொழியில் எழுதப்படாத விளம்பரப் பலகைகளை அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிற மொழிகளில் உள்ள விளம்பரப் பலகைகளை உடைத்தனர்.
ஏற்கனவே கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள பல்வேறு கன்னட அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைதுசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் நாராயண கவுடா உத்தரவின் பேரில், அந்த அமைப்பின் ஆனேக்கல் தாலுகா தலைவர் கஜேந்திரா தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், திடீரென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அத்திப்பள்ளி போலீசார், எரிந்த நிலையில் இருந்த உருவப்பொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இந்த மறியல் போராட்டத்தில், 10 பெண்கள் உள்பட 50 பேர் கலந்துகொண்டனர்.
கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினரின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்