search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே கன்னட அமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம்
    X

    ஓசூர் அருகே கன்னட அமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டம்

    • மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் நாராயண கவுடா உத்தரவின் பேரில், அந்த அமைப்பின் ஆனேக்கல் தாலுகா தலைவர் கஜேந்திரா தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர், திடீரென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவப்பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அத்திப்பள்ளி போலீசார், எரிந்த நிலையில் இருந்த உருவப்பொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இந்த மறியல் போராட்டத்தில், 10 பெண்கள் உள்பட 50 பேர் கலந்துகொண்டனர்.

    கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினரின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×