search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழையால்"

    • பழவாற்றின் குறுக்கே 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.
    • சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் என்ற ஊரில் பழவாற்றின் குறுக்கே 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.

    சிறிய பாலமாக இருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு சுமார் ரூ.6 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

    இதற்காக பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே மணல் மூலம் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியே இருசக்கர மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.

    நமச்சிவாயபுரம் கல்யாண சோழபுரம் கடலங்குடி பூதங்குடி உத்தரங்குடி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை மற்றும் திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பாலம் வழியே தான் செல்ல வேண்டும்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

    இந்த தண்ணீர் அதி வேகத்துடன் சந்திப்பதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பாலத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் பாலத்தின் ஒரு பகுதி வழியே கடந்து செல்கின்றனர்.

    பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மயிலாடுதுறை செல்வதற்கு 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    விரைந்து பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த தொடர் மழையால், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்தது.
    • மழை நீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    எடப்பாடி:

    கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சித்தூர், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, வெள்ளரிவெள்ளி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த தொடர் மழையால், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

    குறிப்பாக காவிரி பாசனப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையால் சேதம் அடைந்து வருகிறது. இப்பகுதியில் மழைப்பொழிவு தொடர்ந்திடும் நிலையில், மேலும் பாதிப்பு அதிக ரிக்கக்கூடும் என இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது.
    • இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.

    எடப்பாடி:

    எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவி வந்தது., இந்த நிலையில், நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது.

    பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணித்தனர். திடீர் கனமழையால் எடப்பாடி அடுத்த காவிரி வடிநிலப் பகுதிகளான மோளப்பாறை, ஓடைக்காட்டூர் மற்றும் நெடுங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    அப்பகுதி வயல்களில் தேங்கிய நீரை விவசாயிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான மானாவாரி நிலங்களில் தற்போது நிலக்கடலை பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில், பூ பிடிக்கும் தருவாயில் உள்ள நிலக்கடலை பயிர்களுக்கு திடீர் மழை சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×