search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனஅடி"

    • உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளது.
    • ஒருசில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.

    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 4-வது நாளாக இன்று வினாடிக்கு 300 கன அடியாக நீடித்து வருகிறது . காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக தென்படுகின்றன.

    கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியாற்றின் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்துக் கொண்டே வந்தது.

    இதனால் கடந்த 4 தினங்களாக வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது.

    மேலும் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒருசில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக உள்ளது. 

    • நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.
    • ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு மழை இல்லாததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரானது முற்றிலும் நிறுத்தப்பட்டாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்தானது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு 2000 கனஅடியாக குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 1500 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து சரிவு காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆனது குறைவாகவே காணப்படுகிறது.

    தொடர் விடுமுறை காரணமாக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எண்ணை மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், கடைவீதியிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

    ×