search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திரிக்கோலால் குத்து"

    • திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில். ஓட்டல் தொழிலாளியை கத்திரிக்கோலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • நேற்று இரவு 8 மணி அளவில் சண்முகம் திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு செல்வம் வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் விருத்தாச்சலம் - ராமநத்தம் மாநில சாலையோரம் உள்ள தனியார் ஓட்டலில் பட்டம்மாள் நகரைச் சேர்ந்த சண்முகம் (வயது 38), அசனாம்பிகை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39) ஆகிய இருவரும் பணிபுரிந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே செல்வம் என்பவர் வேலை விட்டு நின்று விட்ட தாகவும், கடந்து ஒரு வரு டத்திற்கு முன்பு செல்வ த்தை சண்முகம் திட்டி அடித்த தாகவும் கூறப்படு கிறது.

    இதனால் நேற்று இரவு 8 மணி அளவில் சண்முகம் திட்டக்குடி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு செல்வம் வந்தார். அப்போது செல்வம் மறைத்து வைத்திருந்த கத்திரக்கோலை எடுத்து திடீரென சண்முகத்தில் முதுகில் குத்தினார். இதில் நிலை தடுமாறிய சண்முகம் கீழே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகத்தை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    ×